Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் அதிகாரி மீது சரமாரி தாக்குதல்: பாஜக அராஜகம்

ஏப்ரல் 23, 2019 09:06

உத்தரபிரதேசம்: மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இன்று நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 117 தொகுதிகளில் 3 ஆம் கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. 

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தேர்தல் அதிகாரி மீது பாஜக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வாக்குச்சாவடி அதிகாரி கூறியதாக சொல்லிய பாஜக தொண்டர்கள் அவரைத் தாக்கினர். 

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் வாக்குச்சாவடி அதிகாரியை அந்த இடத்தை விட்டு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தலைப்புச்செய்திகள்